இலங்கை

காலநிலை மாற்றம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. வௌியிட்ட விடயம்

காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவோடு வட கிழக்கில் ஆட்சி அமைத்த தமிழரசின் உள்ளூராட்சி மன்றங்கள் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“ரெய்சினா – Raisina” மாநாடு ஜப்பான் டோக்கியோவில் இடம்பெற்றது. இலங்கை சார்பாக விசேட அழைப்பின் பெயரில் கலந்துகொண்ட போதே பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இவ் மாநாடானது, காலநிலை மாற்றம், பசுமை நிதி, மற்றும் சுற்றுச்சூழல் நீதி போன்ற முக்கியமான பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான மேடையாக காணப்படுகின்றது.

இந்த நிகழ்வை அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF), ORF அமெரிக்கா, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி (JBIC) மற்றும் கெய்சாய் டோயுகாய் (ஜப்பான் வர்த்தக நிர்வாகிகள் சங்கம்) இணைந்து நடத்தினார்கள்.

அங்கு ஆற்றப்பட்ட எமது நாடு தொடர்பிலான எனது விசேட உரையானது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் காலநிலை மாற்றம் தொடர்பிலும் அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மத்திய அரசானது தகுந்த நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் வட கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்த தமிழரசுக் கட்சியின் சபைகள் மூலமாக இவற்றுக்கான நடவடிக்கைகளை உலக நாடுகளின் ஒத்துழைப்போடு நாம் முன்னெடுக்க தயாராக உள்ளோம். காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அநீதிகள் கரையோர பாதுகாப்பு, மகாவலி, வனப் பாதுகாப்பு, காணிப் பிரச்சனைகள் குறிப்பாக குடிநீர் பிரச்சனைகள் இவற்றுள் அடங்கும். என்பதனையும் இவ் மாநாட்டில் முக்கிய குறிப்பாக குறிப்பிட்டிருந்தேன்.

உங்களுக்குத் தெரியும், இலங்கையில், வானிலையை சரிபார்ப்பதில் நாங்கள் நிபுணர்களாகிவிட்டோம் – ஏனென்றால் அது எங்கள் கொள்கை ஆவணங்களை விட வேகமாக அவை மாற்றமடைகின்றது. ஒரு நாள் வெள்ளத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், மறுநாள் எல்லாம் வறண்டு போகும் அளவில் உள்ளது. அதற்கும் தயாராக உளோம். நீங்கள் வடக்கு அல்லது கிழக்கில் இருந்தால், “காலநிலை மாற்றமா? அது செவ்வாய் என்று அழைக்கப்படுகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

தெற்காசியாவில் காலநிலையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இலங்கை ஒன்றாகும். ஆனாலும் இங்கு இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையாக உள்ளது. இருப்பினும், உலக வங்கி மற்றும் பிறவற்றிலிருந்து எங்களுக்கு சில உதவிகள் கிடைத்துள்ளன, ஆனால் ஒட்டுமொத்தமாக எமது நாட்டிற்கான காலநிலை மாற்றத்திற்கான நிதி மிகவும் குறைவடைந்து விட்டது.

வறட்சியின் போது விவசாயிகளுக்க்கான குறுகிய கால நிவாரணத் திட்டங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் நிதி முடிந்ததும், உதவியும் முடிந்துவிடுகிறது. நீடிக்கக்கூடிய உள்கட்டமைப்போ அல்லது அமைப்புகளோ பெரிதாக இல்லை. இலங்கையில் நெடுந்தீவு மாதிரியான இடங்களில் மழைநீர் சேகரிப்பு உதவிகரமாக இருந்தாலும், இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் தண்ணீர் பவுசர்களையே நம்பிக்கொண்டு இருக்கின்றன. பெண்கள் இன்னும் மைல்கள் நடந்து சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இது 2025 ஆனாலும் அடிப்படை வசதிக்கே பாரிய போராட்டமாக உள்ளது. இது வெறும் காலநிலை பிரச்சனை அல்ல. இது ஒரு மனிதாபிமானப் பிரச்சனை ஆகும்.

நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயம், காலநிலை மாற்றங்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியான வறட்சி காரணமாக குறைந்த மகசூல், தாமதமான அறுவடைகள் மற்றும் நிலையற்ற உணவு விநியோகம் காணப்படுகின்றது. காலநிலை எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள் வெப்பம், வெள்ளம் மற்றும் மோசமான மண்ணைத் தாங்கும் பயிர்கள் உள்ளன, ஆனால் மிகவும் குறைவாக எமது விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. இவை தொடர்பான விவசாய ஆராய்ச்சி ஆய்வகங்களிலிருந்து விவசாயிகளின் கைகளில் அவற்றைப் பெறுவதற்கு தகுந்த முதலீடு, விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் தேவை.

இவை எமது நாட்டில் முக்கிய பிரச்சினைக்குக் கொண்டுவருகிறது. காலநிலை மாற்றம் தொடர்பாக இலங்கையானது தொழில்நுட்பத்தை பாவிப்பது மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக விவசாயத்தில் நமது பொருளாதார நெருக்கடியால் இவற்றை நடைமுறைப்படுத்த முடியில்லை. ஆனால் இப்போது புத்திசாலித்தனமாக மீண்டும் எமது நாட்டை கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பு உள்ளது.

நமக்கு கலப்பு நிதி, பொது தனியார் கூட்டாண்மை மற்றும் நீண்டகால உத்திகள் தேவை. 12 மாதங்களுக்குப் பிறகு மறைந்துவிடும் நன்கொடையாக அளிக்கப்பட்ட நிதி உதவிகள் அல்ல. பரவலாக்கப்பட்ட உள்கட்டமைப்பில் முதலீடு செய்வோம். தன்னாட்சியுள்ள உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்யலாம், தண்ணீர் அணுகலை மேம்படுத்தலாம், மற்றும் நிலைத்தன்மையை ஒரு தேசிய முன்னுரிமையாக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.

எமது நாட்டின் நடவடிக்கைக்கான எனது அழைப்பானது. காலநிலை மாற்றங்களுக்கான குறுகிய உதவிகளை வழங்குவதை விட நீடிக்கும் அமைப்புகளை உருவாக்குவோம். நிதி, தொழில்நுட்பம் மற்றும் துறைகள் மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பு குறித்து தீவிரமாகப் கலந்துரையாடுவோம். நீண்டகால செயல்திட்டங்களை உருவாக்குவோம்.

மேலும், மழைக்காலங்களில் மாம்பழங்களை வளர்த்து, வறட்சியின் போது ஐந்து நிமிடங்களில் நம் துணிகளை உலர்த்த முடிந்தால், நிச்சயமாக இதையும் நம்மால் நிவர்த்தி செய்ய முடியும்.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button