இந்தியா

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு!; கனிமொழி குற்றச்சாட்டு!

நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது என கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது.

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்’ இவ்வாறு கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *