இந்தியா

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!; அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை ஈ.சி.ஆர். வீதியில் முட்டுக்காடு பகுதி அருகே நள்ளிரவு வேளை, தி.மு.க கொடி கட்டிய காரில் பயணித்த சில இளைஞர்கள் குறித்த வீதியூடாக சென்ற பெண்கள் பயணித்த காரொன்றை துரத்திச் செல்லும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்து சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஈ.சி.ஆர் பகுதியில் நடந்த இச் சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது. தி.மு.க கட்சி கொடி கட்டிய காரில் சென்ற இளைஞர்கள் பெண்ணிடம் மோசமாக நடந்துள்ளனர். இச்செயலை பார்க்கும்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு முழு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. இரவு, பகல் என எந்த நேரத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மாநில அரசு பொலிஸாரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும்.

கையாலாகாத தி.மு.க. அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை” இவ்வாறு அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.