ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

சாத்தியமான கூடுதல் தடைகள் குறித்த விவரங்களை ட்ரம்ப் தெரிவிக்கவில்லை.

2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பிற்காக அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவிற்கு பெரிதும் தடை விதித்துள்ளது.

உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் விவகாரத்தையும் தனது நிர்வாகம் கவனித்து வருவதாகக் கூறிய ட்ரம்ப், உக்ரேனுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்ற தனது கருத்தையும் வலியுறுத்தினார்.

அதேநேரம், உக்ரேன் போரை நிறுத்த தலையிடுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.

இதேவேளை பதவியேற்ற ஒரு நாள் கழித்து வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய ட்ரம்ப், அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டினார்.

இதன்போது, ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டணங்களுடன் தாக்குவதாகவும் சபதம் செய்தார்.

அதேநேரம், எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் சீனத் தயாரிப்புப் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டி, கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத வரிகளை விதிப்பு தொடர்பான எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்தது.

உத்தியோகபூர்வ வர்த்தக தரவுகளின்படி, மெக்ஸிகோ, கனடா மற்றும் சீனா ஆகியவை அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னணி ஆதாரங்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button