பௌத்த மதத்தை அவமதிக்கும் செயல்கள் பாதிரியார் ஜெரோம் தொடர்பில் மகாநாயக்கர்கள் கடும் எச்சரிக்கை

பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மத மோதலாக மாறுவதற்கு முன்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மகாநாயக்கர்களான மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதிரியார் ஜெரோமின் செயற்பாடுகளுக்கு எதிராக மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவால் நடத்தப்பட்ட சமய நிகழ்ச்சியின் போது, ஒருவர் அணிந்திருந்த ஆடை தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் அண்மைய நாட்களில் வெளியாகியிருந்ததுடன், அவ்வாறான சம்பவங்களைக் கண்டித்து கர்தினால் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில் இது தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இராவண சக்தி மற்றும் சிங்கள அமைப்புகளின் பிக்குகள், மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரர், இது தொடர்பான பிரச்சினை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
இதேவேளை, ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரரும், கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவின் செயற்பாடுகள் குறித்து அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பினருக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மத மோதலாக மாறுவதற்கு முன்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மகாநாயக்கர்களான மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
![]()