இன்றைய குரோதி வருடம் மார்கழி மாதம் உங்களுக்கு எப்படி!

நல்ல நேரம் மாலை: 10.45 – 11.45

ராகு காலம் பிற்பகல்: 1.30 – 3.00

எமகண்டம் காலை: 6.00 – 7.30

குளிகை காலை: 9.00 – 10.30

மேஷம்

மறக்க முடியாத சம்பவம் நடக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் திடீர் சந்திப்பு உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும்.

ரிஷபம்

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மிதுனம்

வரவேண்டிய பணம் வந்து சேரும். வீடு கட்டும் திட்டம் உறுதியாகும் /வியாபாரத்தில் புது வாடிக்யைளர்கள் அதிகரிப்பர். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்

பண விஷயத்தில் கண்டிப்பாக இருங்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். உடல் நிலையில் கவனம் தேவை.

சிம்மம்

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். மாணவர்கள் பலவீனமான பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி

வழக்கு சாதகமாக முடியும். வெளிநாட்டு செய்தி மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.

துலாம்

பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

விருச்சிகம்

உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும்.வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள்.

தனுசு

இன்று மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

மகரம்

வியாபாரத்தில் வேலையாட்களால் கஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. சுபச் செலவுகள் அதிகமாகும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம்.

கும்பம்

பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வர். பங்குச் சந்தையில் கவனம் தேவை. தாய் வழி உறவினர்கள் கை கொடுப்பர்.

மீனம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை நிறைவு பெறும் ,எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button