நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் கொடுப்பனவு தொடர்பில் அறிக்கை கையளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி. சித்ரசிறியின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *