இந்தியா

இந்திய விமான நிறுவனங்களுக்கு சுமார் 1,000 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்!

இந்தியாவின் விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தம் 999 போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக அந்நாட்டின் துணை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது 2023 இல் பெறப்பட்ட அச்சுறுத்தல்களை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் என்று அமைச்சர் முரளிதர் மொஹோல் கூறியுள்ளார்.

இந்த வெடி குண்டு மிரட்டல்களில் 500 க்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்கள் ஒக்டோபர் இறுதி இரண்டு வாரங்களில் பெறப்பட்டன.

போலி அச்சுறுத்தல்களின் வியத்தகு அதிகரிப்பு, விமான அட்டவணையில் அழிவை ஏற்படுத்தியது, இதனால் சேவைகளில் பரவலான இடையூறு ஏற்பட்டது.

இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸார் 256 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2014 – 2017 க்கு இடையில் இந்திய அதிகாரிகள் விமான நிலையங்களில் வெறும் 120 போலி வெடிகுண்டு எச்சரிக்கைகளை மாத்திரம் பதிவு செய்திருந்தனர்.

இவற்றில் 50 சதவீதமானவை நாட்டின் மிகப்பெரிய விமான நிலையங்களான டெல்லி மற்றும் மும்பைக்கு விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *