இலங்கை

ஜனாதிபதி ரணிலின் ஆட்சி தொடர வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடர்ந்தால் தான் கடந்த இரண்டு வருட வளர்ச்சியை முன்கொண்டு செல்ல முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை (21) நடைபெற்ற நிலையில், யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரண்டு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்ல முடியும்.

கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் நாடு மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டிருந்தது. அப்போது எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வராத நிலையில் தற்துணிவுடன் பொறுப்பேற்று நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பச் சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

அதனால் அவரது வெற்றி இம்முறை நாட்டுக்கு அவசியமாகின்றது என்றும் சுட்டிக்காட்டிய அவர் நாட்டு மக்களும் அவரை வெற்றியடையச் செய்ய அணிதிரண்டு வாக்களித்து வருகின்றனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.