ஆட்டுத்தோல் அணிந்து வரும் குழுக்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள்

தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், செம்மறி ஆட்டுத்தோல் அணிந்து வரும் குழுக்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் தேசிய மக்கள் கட்சி நாடு முழுவதும் அலுவலகங்களை அமைத்தாலும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலுவலகங்களைத் தவிர மக்களின் வாக்குகளால் தேசிய மக்கள் படை தேர்தலில் வெற்றிபெற முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் பாரிய உறவு காணப்படுவதாகவும் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டை ஆள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button