ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல்; 08 பேர் பலி

காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள பாடசாலையொன்றின் தங்குமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள துல்கரேம் மீது ட்ரோன் தாக்குதல்களால் இலக்கு வைத்து 14 வயது சிறுவனைக் கொன்றது.

இதனிடையே, பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் அவரது அரசாங்கத்திற்கு எதிராக போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் காஸாவில் கைதிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களை நெதன்யாகு நம்பியிருப்பதனது ஒப்பந்தத்திற்குப் பதிலாக மேலும் கைதிகள் சவப்பெட்டிகளில், அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள என ஹமாஸின் ஆயுதப்பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் மோதலால் இதுவரை 40 ஆயிரத்து 819 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button