தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்

வாக்காளர்களின் சுயாதீனமான பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆய்வுகள் நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான கணக்கெடுப்புகளில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படலாம் என இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

வாக்காளர்களின் சுயாதீனமான கருத்துக்களை பாதிக்கும் வகையில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்துவதை தவிர்க்குமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதன்படி இந்த வாரம் தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் இது குறித்து விவாதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கடந்த வாரங்களில் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த தேர்தல்கள் ஆணையாளர்,

இந்த கருத்துக்கணிப்பு காரணமாக சில வேட்பாளர்கள் பாரபட்சம் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த கருத்துக்கணிப்புகளை யார் நடத்தியது என்பது குறித்து தேர்தல் ஆணையமும் இந்த நாட்களில் ஆய்வு நடத்தி வருகிறது என்றார். ஆய்வின் தகவல்களும் பெறப்படும் என்றும், இந்தக் கருத்துக் கணிப்புகளை நிறுத்தும் முறை குறித்தும் ஆணையத்தில் விவாதிக்கப்படும் என்றும் தலைவர் கூறினார்.

இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது இலகுவானது. எனினும், சமூக ஊடகங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது இலகுவானதல்ல.

ஆகையினால், இது தொடர்பில் விரைவான வழிமுறை தேவை என அவர் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button