2021 இற்குப் பின்னர் முதன் முதலாக ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்தியது ஜேர்மன்: மனித உரிமைக் குழுக்கள் விமர்சனம்

2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், முதல் முறையான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை ஜேர்மனி நாடு கடத்தியுள்ளது.

நாடு கடத்தப்பட்ட அனைவரும் ஜேர்மனியில் தங்குவதற்கு உரிமை இல்லாத குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கு எதிராக நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று அந்நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு கத்தார் ஏர்வேஸ் சார்ட்டர் ஜெட் காலை 6:56 இற்கு காபூல் நோக்கி புறப்பட்டது என்று கிழக்கு மாநிலமான சாக்சோனியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த விமானத்தில் இருந்த அனைத்து ஆப்கானிஸ்தான் குடிமக்களும் ஆண்கள் என்று ஜேர்மன் செய்தி நிறுவனமான dpaக்கு ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கனி வெளியேற்றப்பட்டதிலிருந்து ஜேர்மனி தலிபான் அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தது.

இதனால், நாடு கடத்தப்படுவதைப் பாதுகாக்க அரசாங்கம் மாற்று வழிகளில் பணியாற்ற வேண்டியிருந்தது.

ஜேர்மன் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், கத்தார் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தி, இதற்கான பணிகளை எளிதாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் “தற்போது ஆப்கானிஸ்தானுக்கு பல மேற்கத்திய நாடுகளின் இராஜதந்திர பணிகளை வழங்குவதுடன், அங்குள்ள மற்ற நாடுகளின் நலன்களையும் கவனித்து வருகிறது.

சந்தேக நபர் கடந்த வருடம் பல்கேரியாவிற்கு நாடு கடத்தப்படவிருந்தார், ஆனால் அவர் சிறிது காலம் காணாமல் போனதாகவும், நாடு கடத்தப்படுவதைத் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், பரவலான மனித உரிமை மீறல்களுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவது, குறித்து மனித உரிமைக் குழுக்களால் விமர்சிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button