முச்சந்தி

வாக்களிக்க முடியாதவர்கள்: தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு கோரலாம் என ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அடுத்த மாதம் 1 ஆம் திகதி அல்லது அதற்கு முன், தேர்தல் ஆணைக்குழுவுக்கு விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *