பிலிப்பைன்ஸில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 33 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக பட்டன் மாகாணத்திலுள்ள தலைநகர் மணிலா, லூசன், கல்பர்சன் ஆகிய நகரங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்கும் நீர் புகுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவினால் இதுவரையில் 33 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *