Uncategorized

கொழும்பில் போதைப் பொருளை மறைத்து வைக்க முற்பட்ட பொலிஸார்?

கொழும்பில் கார் ஒன்றில் சோதனை செய்த பொலிஸார் அதில் போதைப் பொருளை மறைத்து வைக்க முற்பட்டதாக தெரிவிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்கள் மிகவும் வைரலாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் இடம்பெற்ற திகதி மற்றும் காலம் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், காணொளியின் உறுதித்தன்மை சரிபார்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாகனத்தை சோதனை செய்த பொலிஸார், காரினுள் போதைப் பொருளை மறைத்து வைக்க முற்பட்டதாக தெரிவித்து இளைஞர்கள் குழுவென்று கூறுவது காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது இளைஞர்கள் தங்கள் சட்டத்தரணிகளை தொடர்பு கொள்வதாகவும் கூறுகின்றனர்.

உறுதித் தன்மை சரிபார்க்கப்படாத காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அதேநேரம் இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை பொலிஸார் தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *