வேட்பாளராக ரணிலையே நிறுத்த வேண்டும்;  பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர்த்து வேறு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அதனை எதிர்த்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு மலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

வேறு வேட்பாளர் ஒருவரை கட்சி முன்னிறுத்தினால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவுத் தெரிவிக்க இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் முன்னெடுப்பதற்கும் இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button