கவிதைகள்

“நாளை உனக்கான தண்டணை” …. கவிதை … முல்லைஅமுதன்.

அழைப்பு வந்திருந்தது.
பிரித்துப் படித்ததில் ஆச்சரியம்..
கண்களுடன்,
மனதும் வியந்தததுடன்
ஒருவித அச்சமும் வந்தது.
மனைவியிடம் கொடுத்தேன்.
இதில் உங்கள் பெயர் இல்லையே
என்றாள்.

அப்படியாயின்
உனக்காக இருக்குமோ?
அவள் பயந்தாள்.
இருவரும் எதுவும் செய்ததில்லையே..

நல்லது செய்தாலும் அச்சமே நண்பன் சொல்லியிருந்தான்.
நாளை உனக்கான தண்டணை நிறைவேற்றப்படும்.
அவை கடுமையாக இருக்கும்..

ஆயுதங்களின் கடிதங்களை யாரிடமும் காட்டிக்கொள்ளமுடியாது..
கடவுளின் தண்டணையைவிட
ஆயுதங்கள் முன் தன்னைப் பலியிடுதல் என்பது
கொடூரம்தான்..
நாங்கள் முழந்தாளிட்டுள்ளோம்.

முல்லைஅமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *