முச்சந்தி
இலத்தீன் அமெரிக்காவில் சீன ஆதிக்கம்! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

அட்லாண்டிக் – பசிபிக் கடலை இணைக்கும் கால்வாயை
நிக்கரகுவா அரசு ரத்து செய்ய தீர்மானம் !
அட்லாண்டிக் – பசிபிக் கடலை இணைக்கும் சீனாவின் கால்வாய் திட்டம் சுற்றுச்சூழலுக்கும் கிராமப்புற சமூகங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று அறிஞர்கள் தெரிவித்தனர்.
இரண்டு பெருங்கடல்களை இணைக்கும் கால்வாய்:
அட்லாண்டிக் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் கடல் போக்குவரத்துக் கால்வாய்க்கான கட்டுமானப் பணிகளை நிகராகுவா 2014 துவக்கியது.
இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீன நிறுவனம் இது வரலாற்றில் புதிய தருணம் என்றுவர்ணித்தது. இந்தக் கால்வாய் நாட்டின் பொருளாதாரத்தின் போக்கை மாற்றிவிடும் என்று நிக்கராகுவா அரசும் நம்பிக்கை வெளியிட்டது.
நிக்கரகுவா கால்வாய் (Canal de Nicaragua), கரீபியன் கடலை இணைக்கும் நிகரகுவா வழியான கப்பல் பாதையாகும். அதனால் அட்லாண்டிக் பெருங்கடல் பசிபிக் பெருங்கடலுடன் இணைகிறது.
நிக்கரகுவா ஏரி மத்திய அமெரிக்காவின் முக்கிய நன்னீர் நீர்த்தேக்கமாக இருப்பதால் இத்திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர். ஜூன் 2013 இல், நிகரகுவாவின் தேசிய சட்டமன்றம், சீன தொழிலதிபரான வாங் ஜிங் தலைமையிலான HK நிகரகுவா கால்வாய் மேம்பாட்டு முதலீட்டுக் குழுவிற்கு(HKND) நிதியுதவி மற்றும் திட்டத்தை நிர்வகிப்பதற்கு 50 ஆண்டு சலுகை வழங்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல்அளித்தது.
நீர்வழிப்பாதை செயல்பாட்டிற்கு வந்தவுடன் இந்தச் சலுகையை மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்க முயன்றது.
பனாமா கால்வாயை விட பெரியது:
அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாயை விட இந்தக் கால்வாய் பெரிதாக இருக்கும் ஆழமானதாக இருக்கும். இது 278 கிலோமீட்டர் தூரம் செல்லும்.
இந்தக் கால்வாய்த் திட்டம் அமுலுக்கு வந்த பிறகு, கடல் வழிவர்த்தகம் உலக அளவில் 5 சதவீதம் அளவுக்கு கூடுதலாகும் என்றும், இதனால் நிக்கராகுவாவின் பொருளாதாரம் இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவின் மேற்குக் கரையில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல வேண்டிய கப்பல்கள் தென்அமெரிக்காவை சுற்றிப் போவதைத் தவிர்க்கவே பனாமா கால்வாய் 1914ஆம் ஆண்டிலிருந்து கடல் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.
சுமார் 77 கிலோமீட்டர் தூரமுடைய பனாமா கால்வாயை விரிவுபடுத்தும் பணிகள் நடக்கின்றன. பனமா கால்வாய்க்கு வடக்காக இந்தப் புதிய நிக்கரகுவா கால்வாய் கட்டப்பட திட்டமிடப்பட்டது.
அட்லாண்டிக் – பசிபிக் பெருங்கடலை இணைக்கும்ஒரு கால்வாயை அமைப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தில் ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, நிக்கரகுவா, சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் கிராமப்புற சமூகங்களை இடமாற்றம் செய்யும் என்பதால், இத்திட்டத்தை முடிக்க சீன தொழிலதிபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட சலுகையை தற்போது ரத்து செய்துள்ளது.
2014 இல் தரை உடைப்பு இருந்த போதிலும், நிக்கரகுவாவின் அட்லாண்டிக் – பசிபிக் கடற்கரைகளை இணைக்கும் கால்வாயில் எந்த வேலையும் செய்யப்படவில்லை.
நிக்கரகுவா விவசாயிகள் எதிர்ப்பு:
நிக்கரகுவா அரசாங்க திட்டத்திற்கான கடல்்பாதையை உருவாக்குவதற்காக நிலம் கைப்பற்றப்பட்டதற்கு எதிராக ஆயிரக்கணக்கான நிக்கரகுவா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2019 ஆம் ஆண்டில், நிகரகுவா நீதிபதி ஒருவர் போராட்டத்தில் பங்கேற்ற மூன்று விவசாயிகளின் தலைவர்களுக்கு 216 ஆண்டுகள், 210 ஆண்டுகள் மற்றும்159 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.
இக்கால்வாய் மற்றும் சுற்றுச்சூழலில் ஜனாதிபதி டேனியல் ஒர்டேகாவின் ஆட்சியின் படை தன்னிச்சையான தன்மையின் அடையாளமாக மாறியது.
ஒர்டேகாவின் அரசாங்கம் கால்வாய் பல்லாயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கி, பொருளாதாரத்தை தூண்டும் என்று கூறியது.
இது கடுமையான சுற்றுச்சூழல் அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், கிராமப்புறங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களை இடம்பெயரச் செய்யும் என்றும், நிதி ரீதியாக சாத்தியமற்றது என்றும் எதிர்ப்பாளர்கள் வாதிட்டனர்.
வெகுஜன எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது:
திட்டத்தின் மீதான கோபம், ஒர்டேகா அரசாங்கத்தின் மீதான பொது அதிருப்தியை அதிகரிப்பதற்கான ஆரம்பகாரணியாகும். இது 2018 இல் வெகுஜன எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக அரச அதிகாரிகளின் வன்முறை அடக்குமுறை ஏவப்பட்டது.
இந்த கால்வாய் மத்திய அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரியான நிக்கரகுவா ஏரியை இரண்டாகப் பிரித்திருக்கும், மேலும் கரீபியன் கடற்கரையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பூர்வீக பிரதேசங்களிலிருந்து ராமா மற்றும் கிரியோல் சமூகங்கள் உட்பட 120,000 மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரும் நிலமையை ஏற்படுத்தியிருக்கும்.
நிக்கரகுவா நாட்டின் மிகமுக்கியமான நன்னீர் இருப்பையும், 22 ஆபத்தான உயிரினங்கள் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட இயற்கை இடங்களை அழிக்கவும் செய்யும்.
சீன சொந்தமான HK கால்வாய் மேம்பாட்டு நிறுவனம்:
ஹாங்காங்கை தளமாகக் கொண்ட சீன தொழிலதிபர் வாங் ஜிங்கிற்கு சொந்தமான HK, நிறுவனத்திற்கு 50 ஆண்டு கால்வாய் நிக்கரகுவா கால்வாய் மேம்பாட்டு முதலீட்டு சலுகை வழங்கப்பட்டது.
முறையான ஆலோசனை, சுற்றுச்சூழல் ஆய்வுகள் அல்லதுஅரசியல் விவாதம் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டம் துரிதப்படுத்தப்பட்டதாக அரசியல்்விமர்சகர்கள் தெரிவித்தனர்.
சலுகையை வெல்வதற்கு முன், வாங் சிவில் இன்ஜினியரிங்கில் எந்த அனுபவமும் இல்லாதவர் மற்றும் தொலைத் தொடர்பு துறையில் பெரும் செல்வத்தை ஈட்டியிருந்தார். சீனாவின் 2015 பங்குச் சந்தைநெருக்கடியில் அந்த செல்வத்தின் பெரும்பகுதி இழக்கப்பட்டது, அப்போது அவர் தனது செல்வத்தில் 85% வரை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.
சுற்றுச் சூழல் மிகக் கடுமையாக பாதிப்பு:
இத் திட்ட 50 பில்லியன் டாலர்கள் செலவாகும். அதே நேரம்இந்த கால்வாய் கட்டும் பணியால் சுற்றுச் சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்அச்சம் வெளியிட்டனர்.
மிகப் பெரும் நன்னீர் ஏரியான நிக்கராகுவா ஏரிவழியாகத்தான் இந்தக் கால்வாய் செல்கிறது. இதனால் ஏரியுடைய நீரின் தன்மை பாதிப்படையும் என்ற அச்சம் இருக்கிறது. 2015-16 சீனப் பங்குச் சந்தை வீழ்ச்சியின் விளைவாக இந்தத் திட்டம் தாமதமாகி ரத்துசெய்யப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முதல் கட்டுமானத்தை தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. பசிபிக் பெருங்கடல் கால்வாய் முடிவடைந்த பிறகு, அகழ்வாராய்ச்சி போன்ற முக்கிய பணிகள் நடைபெறவிருந்தன.

ஆயினும் மே 2017க்குள், கால்வாய் அமைப்பதில் உறுதியானநடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை, மேலும் அதன்நிதியுதவி குறித்து மேலும் சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டன. பிப்ரவரி 2018 இல், ஆய்வாளர்கள் இந்ததிட்டத்தை செயலிழந்ததாகப் பார்த்தனர்.
தற்போது அட்லாண்டிக் – பசிபிக் கடலை இணைக்கும் சீனகால்வாய் திட்டத்தை ரத்து செய்வதாக நிக்கரகுவா அரசு தெரிவித்துள்ளது. வெகுஜன எதிர்ப்புகளின் விளைவாகவே இத்திட்டம் கைவிட வழிவகுத்ததாக அறியப்படுகிறது.
![]()