டிரம்ப் குற்றவாளி…. நீதிமன்றம் தீர்ப்பளிப்பு …. யூலையில் தண்டனை அறிவிப்பு!!
டிரம்ப் வணிக பதிவுகளை பொய்யாக்கியதற்காக மொத்தம் 34 குற்ற வழக்குகளை எதிர்கொண்டார். அவர் எல்லா தவறுகளையும் மறுத்தார் மற்றும் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டார்.
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு, நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுடன், டிரம்ப் உடல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டபோது, தன்னோடு நெருக்கமாக இருந்தது பற்றி வெளியே சொல்லாமல் இருக்க ஸ்டார்மி டேனியல்ஸுக்கு தேர்தல் நிதியில் இருந்து $130,000 கொடுத்ததாகப் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது 34 வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த 12 நீதிபதிகள் கொண்ட அமர்வு, டிரம்பை குற்றவாளி என அறிவித்தது. ஜூலை 11 ஆம் திகதி அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
![]()