மகிந்த கோட்டைக்குள் ஏற்பட்ட குழப்பம் – திசைமாறும் ராஜபக்சர்கள்

பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் அனுராதபுரம் மாவட்டத்தின் கலாவெவ தொகுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன், பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற பிரச்சாரங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக, ராஜபக்சவின் கோட்டையான தங்காலையில் தொடங்கிய பிரசாரம் இடைநடுவில் முடங்கியுள்ளதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் தேர்தல் பிரசார அலுவலகம் திறக்கப்பட்டது. இதன்மூலம் பிரசார கூட்டங்களை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *