வாட்டி வதைக்கும் வெயில்.. வங்காளதேசத்தில் 2 வாரங்களில் 15 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கடுமையான வெப்பம் காரணமாக 15 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு உறுதி செய்துள்ளது. பெரும்பாலான இறப்புகள் மகுரா மாவட்டத்தில் பதிவாகி உள்ளன. இந்த மாவட்டத்தில் கடந்த வாரம் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11 மணி முதல் இன்று காலை 11 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 3 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோடை வெப்பத்தை சமாளிக்க, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மதரஸாக்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை கடந்த வாரம் அரசு மூடியது குறிப்பிடத்தக்கது.

புவி வெப்பமடைவதால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில், சீரற்ற மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரும் ஆண்டுகளில் வெப்ப அலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *