இலங்கை

ரூபாவின் மதிப்பு வலுப்பெற்றதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை: பேராசிரியர் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வலுப்பெற்றதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவதன் ஊடாக அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளையும் குறைத்து அதன் பயனை மக்களுக்கு வழங்க முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கை பொருளாதாரம் பலவீனமடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக ரூபாவும் மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம், உலகின் ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.