உலகம்

சமூக ஊடகங்களில் பிள்ளைகளின் படங்களை பகிர்வதால் ஆபத்து – அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை

சமூக ஊடகங்களில்  தங்கள் பிள்ளைகளின் படங்களை பெற்றோர் பகிர்ந்துகொள்வது ஆபத்துக்களை உருவாக்குகின்றது என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளின் படங்களை பதிவிடும் பெற்றோர்களை பாலியல் நோக்கத்தில் பலர் இலக்குவைப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில தங்கள் பிள்ளைகளின் படங்களை பெற்றோர் இலக்குவைத்து செயற்பட்டுள்ள கும்பல்கள் தாங்கள் பணம் செலுத்தினால் பிள்ளைகளின் நிர்வாண படங்களை தருவீர்களா என வேண்டுகோள் விடுத்துள்ளமை இந்த கருத்துக்கணிப்பின் போது தெரியவந்துள்ளது.

4000 பேரிடம் இந்த விடயங்கள் குறித்து கருத்து கோரப்பட்டதாகவும்  இவர்களில் 100க்கும் அதிகமான பெற்றோர் தங்களிடம் தங்கள் பிள்ளைகளின் நிர்வாண படங்களை ஆகக்குறைந்தது ஒருவராவது கோரியதாகதெரிவித்துள்ளனர் என கருத்துக்கணிப்பினை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

சிறுவர் பாலியல் நாட்டம் கொண்டவர்கள் உட்பட பலர் தங்கள் பிள்ளைகளின் படங்களை பார்த்த பின்னர் தங்களிடம் மேலும் படங்களை கோரினார்கள் என தெரிவித்துள்ளனர்.

பொதுவான சமூக ஊடக பதிவுகள் போன்றவற்றில் படங்களை பகிர்ந்துகொள்ளும் பெற்றோரிடம் இவ்வாறான வக்கிரமான கேள்விகள் கேட்கப்படலாம் என அவுஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.