இந்தியா

பெரும் பணக்காரர்களின் பணம் மீட்கப்படும்.! மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.! ராகுல் காந்தி..!

பிரதமர் மோடி தனது கோடீஸ்வர கூட்டாளிகளின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், பெரும் பணக்காரர்களின் பணம் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய சமூக நீதி மாநாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இது ஒரு முக்கியமான படியாகும், இப்போது நிலைமை என்ன, நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், பிரதமர் பீதியடைந்ததை நீங்கள் பார்த்திருக்க வேண்டும் என்றும் இது ஒரு புரட்சிகர அறிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

மோடி தனது கோடீஸ்வர கூட்டாளிகளின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்த தொகை, மில்லியன் கணக்கான இந்தியர்களின் துன்பத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, அதானி குழுமம் போன்ற தனிநபர்களின் செல்வத்தை உயர்த்துவதில் வீணடிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் நண்பர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு 90% மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்தார். மக்களின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் கொடுத்துவிடும் என பிரதமர் மோடி பேசியதற்கு ராகுல் பதில் அளித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.