உலகம்

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் : பிரித்தானிய பிரதமர் மீண்டும் சூளுரை

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் சூளுரைத்துள்ளார்.

ருவாண்டா திட்டத்துக்கு, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகள் முட்டுக்கட்டையாக இருந்ததாக சுட்டிக்காட்டிய பிரிதமர் ரிஷி,

இனியும் தாமதிக்க முடியாது எனவும், இன்றிரவு நாடாளுமன்றம் கூடும் எனவும், ருவாண்டா திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு நடந்தே தீரும் எனவும் கூறியுள்ளார்.

இனி, ஆனால், ஒருவேளை, என்ற பேச்சுக்கெல்லாம் இடமே கிடையாது என தெரிவித்த ரிஷி சுனக், இன்னும், 10 அல்லது 12 வாரங்களில் ருவாண்டாவுக்கு விமானங்கள் போயே தீரும் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கருத்தின்படி, ஜூலை மாதத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் விமானங்கள் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் சூளுரைத்துள்ளார்.

ருவாண்டா திட்டத்துக்கு, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகள் முட்டுக்கட்டையாக இருந்ததாக சுட்டிக்காட்டிய பிரிதமர் ரிஷி,

இனியும் தாமதிக்க முடியாது எனவும், இன்றிரவு நாடாளுமன்றம் கூடும் எனவும், ருவாண்டா திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு நடந்தே தீரும் எனவும் கூறியுள்ளார்.

இனி, ஆனால், ஒருவேளை, என்ற பேச்சுக்கெல்லாம் இடமே கிடையாது என தெரிவித்த ரிஷி சுனக், இன்னும், 10 அல்லது 12 வாரங்களில் ருவாண்டாவுக்கு விமானங்கள் போயே தீரும் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கருத்தின்படி, ஜூலை மாதத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் விமானங்கள் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.