இலங்கை

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் மோசடி : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் இலஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் ஒருநாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் அதிகாலையிலேயே இரு வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருப்போருக்கு காலை 6 மணியளவில் கடவுச்சிட்டு அலுவலகத்தால் இலக்கம் வழங்கப்பட்டு கடவுச்சிட்டு பெற வருவோர் உள்வாங்கப்படுவது வழங்கமாக உள்ளது.

இதன்போது வரிசையில் இரவு பகலாக பலரும் காத்திருக்கும் நிலையில்; ஒருவருக்கு தலா 5000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை பெற்று வரிசையில் காத்திருக்காமலேயே இலக்கங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு கடவுச்சிட்டு அலவலக காவலாளிகள் உட்பட அதிகாரிகள் வரை உடந்தையாக செயற்படுவதாகவும் பொலிஸாரும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் அங்கு இரவு பகலாக வரிசையில் நிற்பவர்கள் குறித்த தினத்தில் கடவுச்சீட்டை பெற முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் அதிகளவான பணத்தினை வழங்கி மிக இலகுவாக கடவுச்சீட்டை பெற முடியவதாகவும் பொதுமக்கள் சிலர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.