சீனாவில் 324 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் இயக்கம்

சீனாவின் மிகப்பெரிய சரக்கு ரெயில் ஷூஜோ-ஹுவாங்குவா வழித்தடத்தில் சோதனை ஓட்டமாக நேற்று இயக்கப்பட்டது. 324 பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயில் சுமார் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் டன் பொருட்கள் வரை சுமந்து செல்ல முடியும். இதற்காக அந்த ரெயிலில் 4 மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த ரெயிலானது ஷாங்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி தளத்தையும், ஹெபே மாகாணத்தில் உள்ள ஹுவாங்குவா துறைமுகத்தையும் நேரடியாக இணைக்கிறது. இதனால் நாட்டின் வர்த்தகத்தில் இது முக்கிய பங்கு வகிக்கும் என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *