தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு – லண்டனில் சிறப்பு மாநாடு
தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்பான சிறப்பு மாநாடு லண்டனில் நடைபெறவுள்ளது.
பிரித்தானிய தமிழர் தேசிய அமைப்புகள் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த மாநாடு இன்று (14) நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் சிறப்பு பேச்சாளர்களாக மனித உரிமைகள் பரிஸ்டர் பற்றிக் லூயிஸ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் வீ.எஸ்.எஸ். தனஞ்செயன், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்,பணிப்பாளர் ஜனனி ஜனநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
![]()