அரிக்கொம்பன் உடல்நலம் பாதிப்பு? எங்கக்கிட்டயே விட்ருங்க! – போராட்டம் நடத்தும் கேரள மக்கள்!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரள பகுதியிலேயே விட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கேரளாவின் சின்னக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற ஒற்றை காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. 8 பேரை கொன்ற அரிக்கொம்பன் விளை நிலங்களையும் சேதப்படுத்தியது. அதை பிடித்த கேரள வனத்துறை ட்ராக்கிங் கருவியை அதன்மீது பொருத்தி காட்டிற்குள் விட்டனர்.

அவ்வாறு விடப்பட்ட அரிக்கொம்பன் எல்லை தாண்டி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. தேனி மாவட்டம் கம்பம் ஏரியாவில் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பனை 7 நாட்கள் போராடி பிடித்த தமிழ்நாடு வனத்துறை அரிக்கொம்பனை திருநெல்வேலி மாவட்டத்தில் அப்பர் கோதையாறு முத்துக்குளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button