பூமியை விட்டு விலகி செல்கிறதா சந்திரன்? ; விஞ்ஞானிகள் தெரிவிப்பதென்ன?

தற்போது சந்திரன் பூமியிலிருந்து ஆண்டுக்கு 3.8 சென்றி மீற்றர் தூரம் விலகிச் செல்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியைச் சுற்றி வரும் ஒரே கோள் சந்திரன் மட்டுமே. முன்னதாக, ஈர்ப்பு விசையின் காரணமாகச் சந்திரன் பூமியிலிருந்து நிலையான தூரத்தில் இருப்பதாகக் கருதப்பட்டது,

ஆனால் புதிய கண்டுபிடிப்பு சந்திரனைப் பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நாசாவின் கூற்றுப்படி, சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக ஆண்டுக்கு 3.8 சென்றி மீற்றர் தூரம் விலகி செல்வதாக இங்கிலாந்தை சேர்ந்த நியூஸ் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, பண்டைய மனித நாகரிகங்களால் நாட்காட்டியாக பயன்படுத்தப்பட்ட சந்திரன் நேரத்தை அளவிடுவதில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது.

இருப்பினும், சமீபத்திய கண்டுபிடிப்பு, கடந்தகால கண்டுபிடிப்புகள் பற்றி நிறைய கேள்விகளைக் கொண்டு வந்துள்ளது என்று இண்டி100 இணையதளம் தெரிவித்துள்ளது. ‘மிலன்கோவிச் சுழற்சிகள்’ சந்திரன் பூமியிலிருந்து விலகிச் செல்வதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

பூமியில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு அதன் காலநிலையைப் பாதிக்கிறது. இந்த சுழற்சிகளும் அவற்றின் அதிர்வெண்களும் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தையும் தீர்மானிக்கின்றன.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சந்திரன் அதன் தற்போதைய தூரத்தை விட சுமார் 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு 60,000 கிமீ நெருக்கமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button