நாய்களால் மனிதர்கள் கேலி செய்வதை உணர முடியும்: ஆய்வு
நாய்களால் மனிதர்கள் தங்களைக் கேலி செய்கிறார்களா இல்லையா என்பதை உணரமுடியுமாம்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இது தெரியவந்துள்ளது.
தங்களுக்கு உணவு அளிக்கக்கூடியோரிடம் கூடுதலாகவே அவை பொறுமை காப்பதாகவும் ஆய்வு சொன்னது.
மனிதர்களின் நோக்கங்களை நாய்களால் புரிந்துகொள்ள முடியும் என்கிறது ஆய்வு.
மனிதர்களின் உற்ற நண்பர்களாகக் கருதப்படும் நாய்கள், ஆயிரக் கணக்கான ஆண்டுகள், நம்மைச் சுற்றிச் சுற்றி வந்துள்ளன.
அவை எந்த அளவுக்கு நம்மைப் புரிந்துவைத்துள்ளன?
வியன்னாவிலுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அது குறித்த சோதனை ஒன்றை நடத்தினர்.
![]()