எந்தக் காலேஜ்ல படிக்கிறீங்க? 56 வயசுல இப்படியொரு ஸ்டைலா.!
நடிகை நதியா மலையாளத் திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் பத்மினியோடு இணைந்து நோக்கத்த தூரது கண்ணும் நட்டு (1984) படத்தில் நதியா என்ற பெயரில் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது மலையாளத்தில்
பெற்றார்.
இத்திரைப்படம் மீண்டும் தமிழில் பத்மினியோடு பூவே பூச்சூடவா(1985) மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் எம். குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி படத்தில் ஜெயம் ரவி அம்மாவாக மாடர்ன் மம்மி போல் நடித்து அசத்தினார். தற்ப்போது 56 வயதாகும் நதியாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது செம ஸ்டைலான தோற்றத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.
![]()