கட்டிட இடிபாடுகளில் இருந்து மனிதர்களை மீட்க பாம்பு ரோபோ….

இந்த நூற்றாண்டு விஞ் ஞானத்திற்கும் தகவல் தொழில் நுட்பத்திற்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும் விண்வெளியிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி, மனிதனின் சிரமத்தைக் குறைத்துள்ளது. இதன் மூலம் அதிக நன்மைகள் மனித இனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரைக் காப்பாற்ற ஜப்பானிய விஞ் ஞானிகள் ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர். அதற்கு பாம்பு ரோபோ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப் பாம்பு ரோபோ ஐந்தரை அடி நீளம், 10 கிலோ எடை கொண்டு பாம்பு வடிவத்தில் உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரைக் கண்டறிய இது உதவும் எனக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button