சங்கமம்

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த நெல்லிக்காய்

வேறு எந்த வகை காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ 600 மில்லி கிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ்-20 மில்லிகிராம், இரும்புச்சத்து-1.2 மில்லிகிராம் இருக்கிறது. ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக நெல்லிக்காய் விளங்குகிறது. ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற நெல்லிக்காய் உதவுகிறது. தலை முடி உதிராமல், வளர்ந்து, நரை முடி தோன்றுவதை தவிர்க்கிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்: மாங்கொட்டையில் இவ்வளவு நன்மைகளா?
நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. இதனால் மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தி நெல்லிக்காயில் உள்ளது. இதில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.

நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை. எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக்கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.