சங்கதிகள்

வாகன இலக்கத் தகடுகளின் அடிப்படையில் எ‌ரிபொரு‌ள் விநியோகம்

பெற்றோல் வாகன உரிமையாளர்கள் அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்பின்னர் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரவித்தார்.

தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் பெற்றோல் இருப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

லங்கா ஐஓசி சில பெற்றோல் பங்குகளை வைத்திருப்பதாகவும், பெட்ரோலை சந்தைக்கு விநியோகிக்குமாறு லங்கா ஐஓசியிடம் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பெற்றோல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதியே நாட்டிற்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பொதுமக்கள் எரிபொருள் வரிசையில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.