ஒரே ஊரில் 100 போலீஸ் குடும்பம் – சாத்தியமானது எப்படி?

புதுச்சேரி மற்றும் தமிழக காவல்துறையில் திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுமார் 100 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முதுநிலை காவலர், ஊர்க்காவல் படை வீரர், பெண் காவலர் என பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இடம் பிடித்து தனி முத்திரை பதித்துள்ளனர்.

புதுச்சேரி தீயணைப்பு துறையிலும் உதவி ஆய்வாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். காவல்துறை பணிக்கான தேர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்று இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.

புதுச்சேரி மாநில காவல்துறை சார்பில் கடந்த நடந்த தேர்விலும் செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு எழுதினர். இதில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே புதுச்சேரி, தமிழக காவல்துறையில் அதிகம் பேர் பணியாற்றி வரும் நிலையில் தற்போதும் இந்த அளவுக்கு தேர்ச்சி பெற்றிருப்பது ’போலீஸ் கிராமம்’ என்ற பெயர் பெற்றுள்ளது.

அண்மையில் நடந்த தேர்வில் தமிழ்ச்செல்வம் என்பவர் மாநில அளவில் 8-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.ஏற்கனவே இந்த கிராமத்தில் இருந்து போலீஸ் துறையில் பணியில் இருந்து வருபவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வழிகாட்டி வருவது இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக உள்ளது. தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் புதுச்சேரி காவலர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது செட்டிப்பட்டு கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *