இலங்கை அரசாங்கத்தின் ‘குற்றவாளிகளை’ கை தட்டி வரவேற்கும் வழக்கறிஞர்களை உலகில் வேறெங்கும் கண்டிருக்க மாட்டீர்கள்.
நேற்றிரவு இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்த பொதுமக்களை இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவர்களை வழக்கறிஞர்கள் கை தட்டிப் பாராட்டுவதை இந்தக் காணொலியில் காணலாம். இந்தப் போராளிகளுக்காக இலவசமாக வாதாட முந்நூறுக்கும் அதிகமான சட்டத்தரணிகள் முன்வந்திருக்கிறார்கள்.
![]()