பனிக்குடம் உடையாமல் பிறந்த குழந்தை: மருத்துவ உலகின் அதிசயம்!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஒரு தாயின் வயிற்றில் இருந்து பனிக்குடம் உடையாமல் இரட்டை பெண் குழந்தைகளை வெளியே எடுத்து மருத்துவ உலகில் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர்
பெண்ணின் மறுபிறவி பிரசவம்

ஒரு பெண் குழந்தை பெற்றெடுப்பது என்பது மறுபிறவி எடுப்பதற்கு சமம் என்பார்கள். அதிலும், சுகப்பிரசவம் என்பது தற்போதைய சூழலில் அரிதாகப் போயுள்ளது. என்னதான் மருத்துவ உலகம் பலமடங்கு வளர்ந்துவிட்டால், சுக பிரசவம் என்ற பாக்கியம் வெகு சிலருக்கே கிட்டுகிறது. இந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்து ஒரு தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை பனிக்குடம் உடையாமல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

பனிக்குடம் என்றால் என்ன

தாயின் வயிற்றில் கருப்பை எனும் உறை இருக்கும். அந்த உறையில் நிறைந்துள்ள நீரில்தான் கரு உருவாகி வளரும். கரு உருவாகி வளரும் இதற்கு பனிக்குடம் என்று பெயர். இந்த பனிக்குடத்தில் நிறைந்திருக்கும் நீரை தான் பனிக்குட நீர் என்கிறார்கள். பனிக்குடம் என்பது கர்ப்ப காலத்தின் கடைசி கால கட்டத்தில் உடையும் நிகழ்வு ஏற்படுகிறது. அதாவது, பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறி குழந்தை வெளியே வரப்போகிறது என்பதை காட்டவே இந்த நிகழ்வு ஏற்படுகிறது

குழந்தையை பாதுகாக்கும் பனிக்குடம்

கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) இருக்கிறது. இது குழந்தையை பலவிதங்களில் பாதுகாக்கிறது. அமுக்கவிசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இத்திரவத்தைச்சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) உள்ளது. இந்த மென் சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னர் உடையும். இதற்கு rupture of membrane என்று பெயர்

பனிக்குடம் உடையும் நிகழ்வு

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அம்னோடிக் திரவத்தின் சாக் குழந்தையை பாதுகாக்கிறது. இது குழந்தையை பாதுகாப்பாகவும், வளரவும் இடமளிக்கிறது. மேலும், நிலையான வெப்பநிலையில் குழந்தையை வைத்திருக்கவும் இது உதவுகிறது. குழந்தையை பிரசவிக்க பெண்ணின் உடல் தயாராகும்போது, பனிக்குடத்தில் உள்ள தண்ணீர் உடைந்து குழந்தை பிரசவமாகிறது.

ஸ்பெயின் மருத்துவர்கள் சாதனை

இந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்து ஒரு தாயின் வயிற்றில் இருந்து இரட்டை பெண் குழந்தைகளை பனிக்குடம் உடையாமல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். 80,000 குழந்தைகளில் ஒன்று தான் பனிக்குடத்துடன் பிறக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *