எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காத நிஜ உலக கும்ப கர்ணனை தெரியுமா உங்களுக்கு?

நாம் கதைகளில் கும்பகர்ணன் குறித்து கேள்விபட்டிருப்போம். கும்பகர்ணனுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசியே அடங்காதாம். உண்மையில் அப்படியான ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும்? இந்த உலகில் உண்மையிலேயே ஒரு கும்ப கர்ணன் இருக்கிறார் அவரை பற்றி தான் நாம் இங்கு காணப்போகிறோம்.

சிங்கப்பூரை சேர்ந்த 10 வயது சிறுவன் டேவிட். இந்த சிறுவனுக்கு ஒரு வித்தியாசமான வியாதி உள்ளது. Prader-Willi syndrome என அழைக்கப்படும் இந்த வியாதியால் இந்த சிறுவன் கும்பகர்ணனாக மாறியுள்ளான். பொதுவாக மனிதர்கள் சாப்பிடும்போது வயிறு நிரம்பி விட்டால் வயிற்றிலிருந்து ஒரு சிக்னல் மூளைக்கு சென்று வயிறு திருப்தியாக இருப்பதாக உணர வைக்கும். ஆனால் இந்த சிறுவனுக்கு அந்த சிக்னல் செல்வதில்லை அதனால் இந்த சிறுவனுக்கு எப்பொழுதும் பசித்துக்கொண்டே தான் இருக்கும் எவ்வளவு சாப்பிடாலும் பசியே அடங்காது.

எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற கிரேவிங் இந்த சிறுவனுக்கு இருந்து கொண்டே இருக்கும். இதனால் இந்த சிறுவன் அதிகம் சாப்பிட்டு எடை அதிகரித்துள்ளான். தற்போது இந்த சிறுவன் சாப்பிடுவதை தடுக்க இவர் வீட்டில் கிச்சனை பூட்டியே வைத்திருக்கிறார். இல்லை என்றால் கிச்சன் உள்ளே சென்று சமைக்காமல் இருக்கும் பொருட்களை கூட எடுத்து சாப்பிட்டு காலி செய்து விடுகிறானாம்.

இந்த வியாதி குறித்து டாக்டர்கள் சொல்லும் போது இது 15வது குரோமோசோம் மிஸ் ஆகியதால் ஏற்பட்ட விளைவு, இப்படியாக வெகு சிலருக்கே ஏற்படும். தற்போது இந்த சிறுவனுக்கு ஏற்பட்ட இந்த வியாதியை வாழ்நாள் முழுவதும் சரி செய்யவே முடியாது. இந்த சிறுவன் பசியுடனேயே இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். தற்போது சிறுவனாக இருப்பதால் இவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இவன் வளர வளர இவனுக்கு தேவையான உணவு எவ்வளவு என்பதை அறிந்து அதை மட்டும் சாப்பிட்டால் மட்டுமே இவன் ஆரோக்கியமாக இருக்க முடியும். தற்போது இவனுக்கான டயட்டை எழுதி கொடுத்துள்ளோம். இதை மட்டுமே சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். மேலும் வளர வளர டயட்டை மாற்ற வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *