சிறப்பு செய்திகள்

யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை… தலைநகரில் தான் இருக்கிறேன்!

யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை… தலைநகர் கீவ்-வில் தான் இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன
இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இதற்கிடையில், போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு போரை நிறுத்தும்படி உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறார். அதேவேளை ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக ரஷிய தரப்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தலைநகர் கீவ்-வில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்தபடி ஜெலன்ஸ்கி அந்த வீடியோவை எடுத்துள்ளார்.
வீடியோவில் பேசிய ஜெலன்ஸ்கி, நான் தலைநகர் கீவ்-வில் உள்ள பென்கோவா பகுதியில் தான் இருக்கிறேன். யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. புதினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் தலைநகர் கீவ்வில் தான் இருக்கப்போகிறேன்’ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.