சிறப்பு செய்திகள்

பொருளாதார பேரவையை நிறுவ தீர்மானம்!

பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி ஒட்டுமொத்த பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் ´பொருளாதார பேரவை´ வாராந்தம் கூடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

குறித்த பேரவையின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய ஏற்புடைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் தேவையான சந்தர்ப்பங்களில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இயைபுடைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும், தேவைக்கேற்ப பொருளாதாரப் பேரவைக் கூட்டத்திற்கு போதுமான துறைசார் அறிவுகொண்ட கல்வியியலாளர்களை அழைக்கவும், ஜனாதிபதியால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவையின் உடன்பாட்டை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, பொருளாதார பேரவையின் கட்டமைப்பு கீழ்வருமாறு அமையும்.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (தலைவர்)
 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
 வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன
 நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பர்னாந்து
 நிதி அமைச்சர் கலாநிதி பசில் ராஜபக்ஷ
 விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே
 பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன
 இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
 ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்
 திறைசேரி செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல
 இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் தம்மிக்க நாணயக்கார

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.