கதைகள்
தந்திரம்!…. ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 11
தந்திரம்!
அனேகமாக கொட்டாஞ்சேனை பஸ் ஸ்ராண்டில், ஏதாவது நொண்டிச் சாட்டுகள் சொல்லிக் காசு கேட்டபடி நிற்பான் அவன். காசு கிடைத்ததும் குடிப்பதற்காகச் சென்று விடுவான்.
அன்றும் அப்படித்தான்.
மருதானைக்குப் போக பஸ்சுக்குக் காசு வேண்டும் என்றான்.
தரலாம், இதிலே நின்று கொள் என்றேன். என் கைகளைப் பார்த்தபடி நின்றான். மருதானை பஸ் வந்தது. பஸ்சினுள் ஏறிக் கொள், நடத்துனரிடம் காசைக் கொடுக்கின்றேன் என்றேன்.
மெதுவாக நழுவி விலகினான்.
![]()