கதைகள்

காய்கறி!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

சுமலதா கணவன் கணபதியிடம் மார்க்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கிவர அனுப்பினாள்.

வீடு திரும்பிய கணவனிடம், “என்னங்க காய்கறி வாங்கி வரச்சொன்னால் வெறும் காய்கள்
மட்டுமே இருக்கு கறி எங்கே?” என்றாள்.

காய்கறி மட்டுமே வாங்கிவரச் சொன்னாய் என்றவனிடம் அந்த காய்கறியலேயே கறியும் இருக்குதுல்லாங்க என்றாள்.

அதைக்கேட்டு குழம்பிய கணபதி அதனால்தான் நம் ஈழத்தமிழர்கள் மரக்கறி இறைச்சி என்று வேறுபடுத்தி சொல்கிறார்களோ
என்று எண்ணினான்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *