பலதும் பத்தும்

போலந்தில் விநோதம் – AI தொழில்நுட்பத்திற்கு எதிராக ரோபோக்கள் போராட்டம்!

போலந்தின் வர்சா நகரில் ரோபோக்கள் விநோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ரோபோ தொழில்நுட்பம் ஆகியவை வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

ஒலிபெருக்கிகள் ஊடாக “வேலைத் தளங்களைப் பாதுகாத்திடுங்கள்”, “சட்டங்களை இயற்றுவதற்கான நேரம் இது. தாமதிக்காமல் முறைப்படுத்துங்கள்” போன்ற கோஷங்களை ரோபோக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

‘Democratism’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், மனித வடிவிலான (Humanoid) ரோபோக்கள் மற்றும் நான்கு கால் விலங்குகளைப் போன்ற (Quadrupeds) ரோபோக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *