பலதும் பத்தும்

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை

லண்டன் மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ‘எண்களைக் கொண்டு வண்ணம் தீட்டும்’ பிரிவில் புதிய கின்னஸ் உலகச் சாதனையொன்றைப் படைத்துள்ளனர்.

உலகில் இதுவரை இல்லாத வகையில், மிக அதிகளவிலான நபர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு ஓவியமாக இது புதிய உலகச் சாதனையைப் பதிவு செய்துள்ளது.

லண்டன் விலங்கியல் சங்கத்தின் 200-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விசேட சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த பிரம்மாண்ட ஓவியத்தை உருவாக்குவதற்கு 14,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பார்வையாளர்களும் தங்களது வண்ணப் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

லண்டன் மற்றும் விப்ஸ்னேட் ஆகிய இரு மிருகக்காட்சிசாலைகளிலும் வைத்து உருவாக்கப்பட்ட இந்த ஓவியம், 21 பெரிய பலகைகளில் பரந்து விரிந்து காணப்படுவதுடன், இதில் சுமார் 200 வகையான விலங்குகளின் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கின்னஸ் சாதனை ஓவியத்தை, லண்டன் மிருகக்காட்சிசாலைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் விரைவில் பார்வையிட முடியும்.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த ஓவியம் விப்ஸ்னேட் மிருகக்காட்சிசாலைக்கு நிரந்தரமாக மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button