இலங்கை
யாழ்.சிறையில் பிறந்த நாளைக் கழித்த தமிழ் சொல்லிசை பாடகர்

யாழ்ப்பாணம் சிறையில் பிறந்தநாளைக் கழித்த விளக்கமறியலில் உள்ள தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை அவரது தாயாரும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டவர்களும் சென்று பார்வையிட்டனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான ஆவணங்களில் கையொப்பம் வாங்கும் நடவடிக்கைக்காக சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்றனர்.
விளக்கமறியலில் உள்ள சொல்லிசை பாடகர் சங்கீத்சனின் பிறந்தநாள் வெள்ளிக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.
![]()