சூரிய ஒளியினால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து எச்சரிக்கை

சூரிய ஒளியின் காரணமாக புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஹசந்தி லாலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முற்பகல் 10 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலான காலப் பகுதியில் உடலில் சூரிய ஒளி நேரடியாக படுவதனால் புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய ஒளி நேரடியாக படுவதனை தவிர்க்க உரிய ஆடைகளை அணிந்து கொள்வது பொருத்தமானது என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மெலனோமா மற்றும மெலனோமா அற்ற என்ற இரண்டு வகையிலான புற்று நோய்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மெலனோமா அற்ற புற்று நோய் உடலில் சூரிய ஒளி படுவதனால் ஏற்படுவதாகவும், ஆரம்பத்தில் இதனை கண்டறிந்தால் பூரணமாக குணப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உடலுக்குத் தேவையான விட்டமின் டி ஐ பெற்றுக்கொள்வதற்கு சூரிய ஒளி அத்திவாசியம் எனவும் மிதமான சூரிய ஒளி உடலில் படும் போது விட்டமின் டி கிடைக்கப் பெறும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()