2026 சுனாமி வருமா? பாபா வங்காவின் பகீர் கணிப்பு – அறிவியல் என்ன சொல்கிறது?

தீர்க்கதரிசி பாபா வங்கா 2026ம் ஆண்டு இயற்கை அழிவான சுனாமி வரும் என்று கணித்துள்ளார்.
இவரின் 2026இற்கான இயற்கை அழிவுகள் பலித்ததால் இந்த சுனாமி பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பாபா வங்கா 2026ம் ஆண்டு பல விடயங்கள் நடக்கும் என்று கூறி உள்ளார். அந்த விடயங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சுனாமி பற்றி பாபா வங்காவின் 2026இற்கான கணிப்பு ஒன்று உள்ளது.
பாபா வங்காவின் கணிப்புங்கள் படி 2026-ஆம் ஆண்டில் ஒரு பெரும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்றும், அது குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் ஒரு ஆபத்தான சுனாமியைத் தோற்றுவிக்கக்கூடும் என்றும் கணித்துள்ளார்.
இவருடைய பல கணிப்புக்கள் பலித்துக்கொண்டு வருவதாக மக்கள் நம்பி வருகிறார்கள். அந்த வகையில் இந்த சுனாமி பற்றிய கணிப்பும் பலித்தால் என்னவாகும் என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இதை பற்றிய அறிவில் காரணத்தை பார்க்கலாம்.
இதுவரை பாபா வங்காவின் கணிப்புகள் ஆவணங்களின் அடிப்படையில் அமைந்தவையல்ல.
காலப்போக்கில் அவருடன் தொடர்புபடுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்ட சில கூற்றுகளையே மக்கள் இப்போது நடக்கும் சில சம்பவத்துடன் தொடர்பு படுத்தி பார்க்கின்றனர்.
பாபா வங்காவின் கணிப்புகள், அவரை பின்பற்றுபவர்களின் விளக்கங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.
தரவுகள், சென்சார்கள் மற்றும் புவியியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் படி 2026-ல் நிகழவிருக்கும் இயற்கை பேரழிவு பற்றி எந்தவொரு தீர்க்கதரிசனத்தையும் இணைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் எதுவும் இல்லை.
பாபா வங்காவின் கணிப்புகள் தொடர்ந்து பரவி வந்தாலும், அத்தகைய கூற்றுகளின் அடிப்படையில் 2026-ல் ஜப்பானில் ஒரு பெரிய நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்படும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதனடிப்படையில் இயற்கை அழிவை நினைத்து உறுதிப்படுத்தாத வரையில் யாரையும் பீதியடைய வேண்டாம் என்று அறிவியல் காரணம் கூறுகிறது.
![]()