உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு ; அமெரிக்க நீதித்துறையின் முக்கிய கோப்புகள் மாயம்; பெரும் சர்ச்சை

அமெரிக்க நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, அதில் இருந்த 16 முக்கியமான கோப்புகள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாயமான கோப்புகளில் டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான புகைப்படங்களும் அடங்கும் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் தொடர்பான புகைப்படங்களும் அடங்கும்

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பில் கேட்ஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் , சனிக்கிழமை காலையில், அதில் குறைந்தது புகைப்படங்கள் உள்ளிட்ட 16 கோப்புகள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு ; அமெரிக்க நீதித்துறையின் முக்கிய கோப்புகள் மாயம்; பெரும் சர்ச்சை | Jeffrey Epstein Case 16 Files Missing Us Justice

மாயமான கோப்புகளில் ஒன்று, ஜெப்ரி எப்ஸ்டீன், டொனால்ட் ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப் மற்றும் கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமாகும்.

இந்நிலையில் சமூக பிறழ்வான பெண்களின் படங்கள் மற்றும் எப்ஸ்டீனின் இடத்தில் எடுக்கப்பட்ட சில இரகசிய புகைப்படங்களும் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த கோப்புகள் எதற்காக நீக்கப்பட்டன அல்லது தவறுதலாக நீக்கப்பட்டனவா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில் , இன்னும் என்னவெல்லாம் மறைக்கப்படுகின்றன? அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *